இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி
இலங்கைசெய்திகள்

இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி

Share

இலங்கை கடன் மறுசீரமைப்பில் சீனா உதவி

இலங்கையின் மிகப் பெரிய இருதரப்புக் கடன் கொடுனரான சீனா, சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கு முன்னர் இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பில் உதவும் என்று பீடிஐ தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள், வெளி மற்றும் உள் கடன்களான 41 பில்லியன் டொலர்களை மறுசீரமைப்பதற்கான சவால் எதிர்கொள்ளப்படும் நிலையில் சீனா இலங்கைக்கு உதவ உள்ளதாக பீடிஐ குறிப்பிட்டுள்ளது.

2.9 பில்லியன் டொலர்களில் இலங்கைக்கு அடுத்தக்கட்ட நிதியுதவியை வழங்குவதற்காக, இந்த ஆண்டு செப்டம்பர் 11 முதல் 19 வரையான காலத்தில் சர்வதேச நாணய நிதியம் அதன் முதல் மதிப்பாய்வை நடத்த உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வுக்கான நிபந்தனையை பூர்த்தி செய்ய இலங்கை தற்போது அதன் வெளி கடனாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் ஜூன் மாத இறுதி வரை நிகழ்ச்சித் திட்டத்தின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, முதல் மதிப்பாய்வில் நிர்வாகக் குழு மற்றும் பணியாளர்கள் இருவராலும் அங்கீகரிக்கப்பட்டால், இலங்கைக்கு சுமார் 338 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்றும் பீடிஐ தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...