வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி யாழில் அரச ஊழியரின் வீட்டில் தாக்குதல்!
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி யாழில் அரச ஊழியரின் வீட்டில் தாக்குதல்!

Share

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி யாழில் அரச ஊழியரின் வீட்டில் தாக்குதல்!

யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்த தாக்குதலுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளாதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கமராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள தரப்பே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி குறித்த வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை கல்வியங்காட்டில் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டு பல்வேறு வன்முறை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றபோதும் குற்றவாளிகளோ? வன்முறைக் கும்பலோ? இதுவரை கைது செய்யப்படுவதில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 209
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

ஊழல் குற்றச்சாட்டு: நுவரெலியா பிரதேச சபைத் தலைவரின் பிணை மனு நிராகரிப்பு!

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நுவரெலியா பிரதேச சபையின் தலைவரும், இலங்கை தொழிலாளர்...

world 208
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏர்பஸ் ஊழல் வழக்கு: கபில சந்திரசேனவின் பிணை மனு நிராகரிப்பு – ஏப்ரல் 28 வரை விளக்கமறியல்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களைக் கொள்முதல் செய்தபோது பெரும் தொகை இலஞ்சம் பெற்றதாகக்...

Screenshot 2026 04 16 000127
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள்: ஜனாதிபதியால் விசேட விசாரணை ஆணைக்குழு நியமனம்!

இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி தொடங்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 வரையிலான...

செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை: மகளிருக்கு மாதம் ₹2,500 மற்றும் மணப்பெண்களுக்குத் தங்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான...