குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்

Share

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி தகவல்

குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு சூரிய கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறித்த திட்டம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டம் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சு மற்றும் மின்சக்தி, எரிசக்தி அமைச்சகத்தின் கூட்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உதவியின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பல வீடமைப்புத் திட்டங்கள் நிதிப் பிரச்சினைகளால் முடங்கிப்போயுள்ளதுடன், இவ்வாறான வீடுகளை நிறைவு செய்வதற்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சூரிய ஒளி மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மின்சாரம் வழங்குவதற்காக இதுவரை பாதியில் முடிக்கப்பட்ட 11,000 வீடுகளை தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.

இந்த 11000 வீடுகள் 2015-2019 ஆம் ஆண்டுக்குள் அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 15 வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 14000 குறைந்த வருமானம் கொண்ட வீடுகளை சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்குவதற்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது திட்டங்களை தயாரித்துள்ளது.

மின்மயமாக்கலுக்கு தெரிவு செய்யப்பட்ட அரைகுறை வீடுகளின் முழுமையான நிர்மாணப்பணிகள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வெளிநாட்டு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படுவதுடன், வீட்டு உரிமையாளர் அதற்கு பணம் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது மட்டுமின்றி, இந்தத் திட்டம் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தேசிய மின்கட்டமைப்பில் சேமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டத்திற்காக சுமார் 650 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி முதலீடு செய்யப்படும் எனவும் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இந்த திட்டத்தின் உள்ளூர் விநியோகங்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் மீதமுள்ள தொகை திட்டத்தின் வெளிநாட்டு இறக்குமதி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...