இலங்கை
மர்மமான முறையில் உயிரிழந்த 9 வயது சிறுமி
மர்மமான முறையில் உயிரிழந்த 9 வயது சிறுமி
சிலாபம் – இரணைவில பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாபம் , இரணவில் பிரதேசத்தை சேர்ந்த 9 வயதுடைய ஷலனி ரிதுஷா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிலாபம், இரணவில் பிரதேசத்தில் பதிவாகிய சிறுமியின் மரணம் தொடர்பில் முதற்கட்ட நீதவான் விசாரணையும் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையும் நேற்று (12) காலை இடம்பெற்றது.
இதேவேளை, பிரேத பரிசோதனை சிலாபம் பொது வைத்தியசாலையில் நடைபெறவிருந்த நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
You must be logged in to post a comment Login