கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு அறிவிப்பு

Share

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பவர்களுக்கு அறிவிப்பு

இலங்கையில் இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 8.30 மணிவரை இந்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான சேவையின் கீழ் 41588 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அதில் 26972 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களாக சகல ஆவணங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு இதுவரை 6405 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

குறைபாடுள்ள ஆவணங்களுடன் அனுப்பப்பட்ட 14676 விண்ணப்பங்கள் தொடர்பில் விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறைபாடுள்ள ஆவணங்களை மீள அனுப்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகம் விண்ணப்பதாரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...