வழிபட கொடுத்த மதுபானத்தை குடித்த அமைச்சர்!! 
உலகம்செய்திகள்

வழிபட கொடுத்த மதுபானத்தை குடித்த அமைச்சர்!! 

Share

வழிபட கொடுத்த மதுபானத்தை குடித்த அமைச்சர்!!

குஜராத் அமைச்சர் ஒருவர் பழங்குடியின விழாவில் கொடுத்த மதுபானத்தை தவறுதலாக குடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் நர்மதாவில் உள்ள டெடியாபடா தாலுகாவில் உலக பழங்குடி தினத்தை முன்னிட்டு பழங்குடியினர் சிறப்பு விழாவை நடத்தினர்.
இந்த விழாவானது பூமித்தாயை வணங்குவதற்காக நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் குஜராத் வேளாண் துறை அமைச்சர் ராகவ்ஜி பட்டேல், பாஜக எம்எல்ஏ மோதிலால் வாசவா, நர்மதா மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் சங்கர் வாசவா மற்றும் சில கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, பழங்குடியின சாமியார் சாவ்தூ வசவ காட்டு இலைகள், நெற் பயிர்கள், தேங்காய், பச்சை நிற கண்ணாடி பாட்டிலில் மதுபானம் ஆகியயவற்றை வழங்கினார்.
இதில் விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இலையால் செய்யப்பட்ட பச்சை நிற கோப்பையில் மதுபானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து, விழாவில் கலந்து கொண்டவர்கள் மதுபானத்தை தரையில் ஊற்றினர்.
ஆனால், அமைச்சர் ராகவ்ஜி பட்டேல் மதுபானத்தை தவறுதலாக குடித்தார். உடனே, மோதிலால் மற்றும் சங்கர் இருவரும் அமைச்சரிடம் குடிக்க கூடாது என்று கூறினர்.
பின்பு, இலையினால் செய்யப்பட்ட கோப்பையை கீழே போட்டுவிட்டு இதனை நீங்கள் முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
அப்போது, மற்ற அனைவரும் அமைச்சரின் செயலை பார்த்து சிரித்தனர், தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
வீடியோ வைரலானதையடுத்து அமைச்சர் ராகவ்ஜி பட்டேல், “பழங்குடியினரின் பழக்கவழக்கங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. இது எனது முதல் வருகை. எங்கள் சடங்குகளில் எங்களுக்கு தீர்த்தம் வழங்கப்படும் போது, ​​​​நாங்கள் அதை பருகுவோம். அது போல தான் இத்தனையும் நினைத்தேன் ” என்று கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...