இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

Share

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தினசரி கோவிட்டை தடுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான இலத்திரனியல் சான்றிதழ்களை பெற வருகின்றார்கள். அவர்களில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகும்.

மேற்கத்திய நாடுகள் பல இன்னமும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களை கேட்பதனால் வெளிநாடு செல்வதில் கடுமையான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். தற்போது மேற்கத்திய நாடுகளில் புதிய மாறுபாடுகள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் தடுப்பூசி இல்லாத ஒரு நிலையில் இந்த மாறுபாடுகள் நாட்டிற்குள் நுழைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டிகைக் காலத்தில் இணைய மோசடிகள் அதிகரிப்பு: எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசர பிரிவு அறிவுறுத்தல்!

எதிர்வரும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இணையத்தில் பகிரப்படும் போலியான விளம்பரங்கள் மற்றும் இணைப்புகள் (Links) மூலம்...

04 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி: 2026-ஆம் ஆண்டில் 600,000 சுற்றுலாப் பயணிகளைக் கடந்த சாதனை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே பெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...

03 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதிய வானிலை அறிக்கையின்படி, இன்று (மார்ச் 13) நாட்டின் பல...

02 12
செய்திகள்உலகம்

பனிமலை ஏறும் போது நிலைதடுமாறி சரிந்த மலையேற்ற வீரர்: வைரலாகும் திக் திக் காட்சிகள்

உலகின் மிக உயரமான சிகரங்களை நோக்கிய மலையேற்றப் பயணங்கள் சாகசம் நிறைந்ததாக இருந்தாலும், அவை எந்த...