இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

Share

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை

இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தினசரி கோவிட்டை தடுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான இலத்திரனியல் சான்றிதழ்களை பெற வருகின்றார்கள். அவர்களில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாகும்.

மேற்கத்திய நாடுகள் பல இன்னமும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ்களை கேட்பதனால் வெளிநாடு செல்வதில் கடுமையான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். தற்போது மேற்கத்திய நாடுகளில் புதிய மாறுபாடுகள் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் தடுப்பூசி இல்லாத ஒரு நிலையில் இந்த மாறுபாடுகள் நாட்டிற்குள் நுழைவதற்கும் வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...