கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பநிலை

விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவு செய்யும் நேர்முக தேர்வின் போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவியுள்ளது.

விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கு நபர்களை தெரிவு செய்வதில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலையிடுகின்றார் என நேர்முகத் தேர்விற்கு வந்தவர்கள் குற்றம்சாட்டியதை தொடர்ந்தே இவ்வாறு குழப்பமான சூழ்நிலை நிலவியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று(08.08.2023) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 25 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உரிய விதத்தில் தெரிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

100 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் 50 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் நியமிப்பதற்காக பல சுற்று நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 100 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை 50 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் 25 பெண் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மிகுதி 25 பெண்களுக்கு பதிலாக ஆண்கள் அதாவது 125 ஆண்களும் 25 பெண்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு அமைச்சரின் தலையீடே காரணம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையால் நேற்று விமான நிலைய பகுதியில் குழப்பமான நிலை காணப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...