விபத்தில் சிக்கிய 2 கப்பல்... புலம்பெயர் தாயார் பிஞ்சு குழந்தையுடன் மரணம்: 30 பேர்கள் மாயம்
உலகம்செய்திகள்

விபத்தில் சிக்கிய 2 கப்பல்… புலம்பெயர் தாயார் பிஞ்சு குழந்தையுடன் மரணம்: 30 பேர்கள் மாயம்

Share

விபத்தில் சிக்கிய 2 கப்பல்… புலம்பெயர் தாயார் பிஞ்சு குழந்தையுடன் மரணம்: 30 பேர்கள் மாயம்

இத்தாலியின் லம்பேடுசா தீவு அருகே விபத்தில் சிக்கிய இரண்டு கப்பலில் இருந்து 57 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 30 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புலம்பெயர் மக்களின் இரண்டு படகுகள்
இந்த விபத்தில் சிக்கியவர்களில் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலி கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். துனிசியாவின் Sfax துறைமுகத்தில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றில் குடியேறும் பொருட்டு புலம்பெயர் மக்களின் இரண்டு படகுகள் புறப்பட்டுள்ளது.

ஆனால் சனிக்கிழமை இத்தாலியின் லம்பேடுசா தீவு அருகே விபத்தில் சிக்கியது. ஒரு படகில் 48 பேர்களும், இன்னொன்றில் 42 பேர்களும் பயணித்துள்ளதாக கூறுகின்றனர். உயி தப்பியவர்களை லம்பெடுசாவின் தென்மேற்கே 23 கடல் மைல் தொலைவில் கடலோர காவல்படையினர் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் ஐவரி கோஸ்ட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் அவரது ஒரு வயது குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 30 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் 2,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் லம்பேடுசாவுக்கு வந்துள்ளனர். இத்தாலிய ரோந்துப் படகுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனக் குழுக்களால் இவர்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, லம்பேடுசாவுக்கு வந்தபோது பாறைகளில் படகு மோதியதில் சுமார் 20 பேர் வெள்ளிக்கிழமை முதல் ஒரு குன்றின் மீது சிக்கிக்கொண்டுள்ளனர். பலத்த காற்று வீசுவதால் கடல் வழியாக அவர்களை நெருங்கவோ ஹெலிகொப்டரில் மீட்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலியில் இந்த ஆண்டு மட்டும் கடல் மார்கமாக 92,000 பேர்கள் நுழைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 42,600 பேர்கள் இத்தாலியில் கடல் மார்க்கம் நுழைந்துள்ளனர் என்றே தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...