நாட்டு மக்களுக்கு பொலிஸ் அவசர பிரிவு எச்சரிக்கை!
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு பொலிஸ் அவசர பிரிவு எச்சரிக்கை!

Share

நாட்டு மக்களுக்கு பொலிஸ் அவசர பிரிவு எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் அவசர சேவை தொலைபேசி எண்ணான 119 எனும் எண்ணை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

குறித்த அவசர இலக்கமானது 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும், நாளாந்தம் 3,000 முதல் 3,500 அழைப்புகள் வரை இதற்கு அழைப்பு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறிப்பிட்ட கால இடைவெளியில் தரவுகளை ஆய்வு செய்த போது, சில நபர்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்தியதைக் கண்டறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் அவசர சேவை, அதிகாரிகள் அவசர சேவை மற்றும் அத்தியாவசியமான சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புக்களுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய அவசர மற்றும் அத்தியாவசியமான சம்பவங்கள் குறித்து முறைப்பாடு தெரிவிப்பதற்கு மாத்திரம் அவசர தொலைபேசி எண்ணை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...