காணாமல்போன பாடசாலை மாணவி வீடொன்றிலிருந்து கண்டுபிடிப்பு
இலங்கைசெய்திகள்

காணாமல்போன பாடசாலை மாணவி வீடொன்றிலிருந்து கண்டுபிடிப்பு

Share

காணாமல்போன பாடசாலை மாணவி வீடொன்றிலிருந்து கண்டுபிடிப்பு

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவில் காணாமல்போன 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் நேற்றுமுன் தினம் (02 .08.2023) வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குருநாகல் பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் தங்கியிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி தந்தையுடன் பாடசாலைக்கு சென்ற சிறுமி, அன்று காலை காணாமல்போனதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணையை முன்னெடுத்திருந்த பொலிஸார் சிறுமியின் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாடசாலை சீருடை என்பனவற்றினை குருநாகல் பேருந்து தரிப்பிடத்திலுள்ள மலசலகூடத்திலிருந்து மீட்டிருந்தனர்.

இதற்கமைய, தொடர்ந்தும் விசாரணையை முன்னெடுத்த பொலிஸார் தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து சிறுமியை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...