EPF - ETF நிதிகளுக்கு ஆபத்து
இலங்கைசெய்திகள்

EPF – ETF நிதிகளுக்கு ஆபத்து

Share

EPF – ETF நிதிகளுக்கு ஆபத்து

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(ETF) மற்றும் அறக்கட்டளை நிதி(EPF) என்பவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அமைப்பாளருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தோட்டப்புறங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், நகர்ப்புற பகுதிகளில் பணிபுரிபவர்கள், மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(ETF) மற்றும் அறக்கட்டளை நிதி(EPF) என்பவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கான தீர்வு கிடைக்கும்வரை நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம்.

அரசாங்கத்தினால் கொள்ளையடிக்கப்படும் பணம் எமது நட்டு மக்களுக்கு சொந்தமான ஒன்றாகும்.

எங்கள் நிதியைத் தொட எவருக்கும் உரிமையில்லை என்பதை ஒருமுறை எடுத்துக்கூற விரும்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...