இலங்கைசெய்திகள்

வைத்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! அதிகரிக்கப்படும் சம்பளம் – ரணில் தீர்மானம்

Share

வைத்தியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! அதிகரிக்கப்படும் சம்பளம் – ரணில் தீர்மானம்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்றையதினம்(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பளப் பிரச்சினை காரணமாக பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தூண்டப்பட்டுள்ளனர்.

வெளிநோயாளர் பிரிவில் ஒரு நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவருக்கு 28 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு நோயாளியை கிளினிக்கில் பார்க்க சுமார் 36 ரூபாயே வழங்கப்படுகிறது.

பயிற்சி மருத்துவர்கள் இன்னும் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகிறார்கள். இதனால் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளான வைத்தியர்களை இவையெல்லாம் பாதித்துள்ளதுடன், தமக்கு இழைக்கப்பட்ட அநீதியால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

அதனை சரிசெய்வதற்காக அனைத்தையும் மீளாய்வு செய்து நிதியமைச்சுடன் பேசி, எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இது தொடர்பான முதல் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

அது ஏதோ ஒரு விசேடமாக மாறும் என்பதில் உறுதியாக உள்ளோம். இந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் மருத்துவர்களுக்கான சம்பள முறையை உருவாக்குவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...