புலி உறுப்பினர் என்று கூறி யாழ் இளம் பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் இளைஞன்!!
இலங்கைசெய்திகள்

புலி உறுப்பினர் என்று கூறி யாழ் இளம் பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் இளைஞன்!!

Share

புலி உறுப்பினர் என்று கூறி யாழ் இளம் பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் இளைஞன்!!

புலம்பெயர் இளைஞன் ஒருவன் தன்னை விடுதலைப் புலி உறுப்பினர் என்று கூறிக்கொண்டு யாழ்ப்பாண இளம் பெண்னை திருமணம் செய்து அந்தப் பெண்ணின் நகைகளையும் அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட ‘க..ன்’ என்ற அந்த இளைஞன் ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில் வசித்து வருகின்றார்.

திருமணம் கடந்த மார்ச் மாதம் சென்னை ஆதித்யா மண்டபத்தில் நடைபெற்றது.

சீதனம் என்று கூறி பல இலட்சங்கள்.. மாப்பிள்ளை குடும்பத்தாரின் போக்குவரத்துச் செலவுகள் என்று பல இலட்சங்கள் – இப்படி பெருந்தொகைப் பணம் அவருக்கு பெண்தரப்பால் வழங்கப்பட்டது.

திருமண சம்பிரதாயங்கள் முடிந்து பெண்ணுடன் சில வாரங்கள் தங்கியிருந்த அந்த இளைஞன் ஏப்ரல் மாதம் 12ம் திகதி மறுபடியும் ஜேர்மனி சென்றுவிட்டார்.

‘ஒரு மாதத்தல் உன்னை ஜேர்மனிக்கு எடுத்துவிடுவேன்’ என்று கூறி அவர் ஜேர்மனி புறப்படும் போது பெண்ணிடம் இருந்து 20 பவுன் நகையையும் கொண்டு சென்றுள்ளார்.

ஜேர்மனி சென்று ஒரு வாரத்தில் தனது புது மனைவியைத் தொடர்புகொண்ட ‘க…ன்’ என்ற அந்த இளைஞன், தனக்கு ஜேர்மனியில் ஒரு காதலி இருப்பதாகவும், உன்னுடன் வாழ முடியாது என்று கூறியிருக்கின்றார்.

அந்த பெண் நீதி கேட்டுப் போராட முற்பட்டபோது, தான் ஒரு விடுதலப்புலி உறுப்பினர் என்றும், வாள்வெட்டுக்குழுவை அனுப்பி குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்றும் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.

அந்தப் பெண், திருமண நடந்தது உட்பட தான் மிரட்டப்பட்டது வரை அனைத்து ஆதாரங்களையும் ஒப்புவித்தார்.

இந்தியத் தூதரகம், மனித உரிமை ஆணைக்குழு போன்றனவற்றில் தான் முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும், ஜேர்மன் தூதராலயத்திலும் அந்த நபர் பற்றிய முறைப்பாடுகளைத் தான் வழங்க உள்ளதாகவும் அந்தப் பெண் எங்களிடம் தெரிவித்தார்.

‘எனக்கு நீதி வேணும் அண்ணா.. என்னை போல யாழ்பாணத்தில் இனி எந்தப் பெண்ணும் இதுபோல பாதிக்கப்பட கூடாது..’ என்று அந்தப் பெண் கண்ணீரோடு கூறிய வார்தைகள் இப்பொழுதும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. (மனங்களிலும்தான்)

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...