6 1 scaled
உலகம்செய்திகள்

பயண எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய நாடு: திண்டாடும் மக்கள்

Share

பயண எச்சரிக்கை விடுத்துள்ள ஐரோப்பிய நாடு: திண்டாடும் மக்கள்

கோடை காலத்தில் விடுமுறையை கொண்டாட ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்கும் பிரித்தானியர்களுக்கு இந்தமுறை கடும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இத்தாலி, கிரேக்கம் உட்பட பல நாடுகளில் பற்றியெரியும் காட்டுத்தீயால், அங்குள்ள அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேக்கத்தில் ரோட்ஸ் மற்றும் கோர்ஃபு தீவுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், அவசர தேவைகளுக்காக மட்டும் குறிப்பிட்ட நிறுவனங்கள் விமான சேவையை முன்னெடுத்தன.

இந்த நிலையில் மஜோர்காவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, அதே நேரத்தில் ஐபிசா மற்றும் மெனோர்காவும் அதிக ஆபத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலி, கிரேக்க நாடுகளின் வரிசையில் தற்போது போர்த்துகல் நாடும் காட்டுத்தீ ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் லிஸ்பனுக்கு மேற்கே 30 கிமீ தொலைவில் அமைந்துள்ள விடுமுறை தலமான காஸ்காய்ஸ் அருகே தீ விபத்து ஏற்பட்டது.

தீயை அணைக்கவும், வீடுகளை பாதுகாக்கவும் குடியிருப்பாளர்களும் தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர். தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் விமானங்களும் பயன்படுத்தப்படுகிறது. சுமார் 600 தீயணைப்பு வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 218
செய்திகள்அரசியல்இலங்கை

பிள்ளையானின் சிறைவாசத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வாயைக் கட்டி உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...

world 221
செய்திகள்இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை நாளை நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 215
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு: குற்றப் பிரமுகரின் சகோதரர் உயிர் தப்பினார்!

அஹுங்கல்லா பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘லோக்கு பட்டி’ என்பவரின் சகோதரரான ‘பொடி பட்டி’...

world 217
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விடுமுறை முடிந்து கொழும்பு திரும்புவோருக்காக விசேட இரயில் சேவைகள் அறிவிப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தனது சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு மீண்டும் கொழும்பு திரும்பும்...