கொழும்பில் இன்று முன்னெடுக்கபடவுள்ள போராட்டம்!
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இன்று முன்னெடுக்கபடவுள்ள போராட்டம்!

Share

கொழும்பில் இன்று முன்னெடுக்கபடவுள்ள போராட்டம்!

பேலியகொட மெனிங் சந்தையில் இன்று (26.07.2023) நடத்தப்படவிருந்த போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கொழும்பு அளுத்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பேலியகொட பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகரால் நேற்று (25.07.2023) நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (3) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும், அந்த உத்தரவை மீறுவது இலங்கை தண்டனைச் சட்டத்தின் 185வது பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பேலியகொட மெனிங் சந்தையிலுள்ள கடைகளை வெளியாட்களுக்கு வழங்குவதாக குற்றம் சுமத்தி, பொது சந்தை சங்கம் இன்று (26) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது.

இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாக பெலிஸார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்தே மேற்கண்டவாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது...

c34acefde2faa9e2c0759bd873ec068217508303956541071 original
இந்தியாசெய்திகள்

இந்தியாவின் ‘பெர்ப்ளெக்சிட்டி’ சாதனை: கூகுள், ஜெமினி செயலிகளைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம்!

செயற்கை நுண்ணறிவு (AI) உலகையே மாற்றியமைக்கும் இந்த வரலாற்றுத் தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘பெர்ப்ளெக்சிட்டி’ (Perplexity)...

1685686384 NBRO warns of landslide risks in several areas L
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய...

suryakumar salman agha 1200 1760670009
செய்திகள்உலகம்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல் பாகிஸ்தான்...