இலங்கையில் 400 ரூபாவை விட அதிகரிக்கும் டொலரின் பெறுமதி..!
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 400 ரூபாவை விட அதிகரிக்கும் டொலரின் பெறுமதி..!

Share

இலங்கையில் 400 ரூபாவை விட அதிகரிக்கும் டொலரின் பெறுமதி..!

நாட்டில் பொருளாதார நிலைமையானது இப்படியே தொடருமானால் டொலரின் மதிப்பு 400 ரூபாவை விட அதிகரிக்கும் என பேராதனை பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

யார் எதை கூறினாலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் உள்ளூர் தயாரிப்புகள் மூலம் உள்ளூர் வருமான பொருளாதாரத்தையும், அந்நிய செலாவணி கையிருப்பு மூலம் வெளிநாட்டு பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.

பொருளாதாரச் செயற்பாடுகளை வெறும் பேச்சளவில் மாத்திரம் வைத்திருந்தால் எதிர்காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்போது இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி வலுவடைந்து வருகிறது.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை (21.07.2023) மத்திய வங்கி வெளியிட்டிருந்த நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 318.7256 ரூபாவாகவும், விற்பனை விலையானது 331.9854 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...