ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்!
இலங்கைசெய்திகள்

ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்!

Share

ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்!

ஆட்சியை நாம் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் பொருளாதாரப் பிரச்சினை தீரவில்லை. அதிகாரம் உள்ள வர்க்கம் அதிகாரம் அற்ற வர்க்கத்தை நிர்வகித்துக் கொண்டு செல்கின்றது. அவர்களைக் கஷ்டத்தில் தள்ளியுள்ளது.

அந்த மக்கள் வாழ்வதற்காகப் போராடுகின்றார்கள். அவர்களை நாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். அந்த மக்களின் பிரச்சினை தீர வேண்டுமென்றால் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்.

அந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகப் பல வழிகளில் நாம் போராடுகின்றோம். ஆட்சியைப் பிடிக்கும் வரை போராட்டம் தொடரும்.

மின் வெட்டு இல்லாததால், எரிபொருளுக்கான வரிசை இல்லாததால் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிட்டது என்று சிலர் நினைக்கின்றார்கள்.

ஆனால், உண்மையில் பிரச்சினை தீரவில்லை. பிரச்சினை தீர்ந்தால் மக்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு நிம்மதியாக இருக்க வேண்டுமே என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...