விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!

Share

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது வடக்கில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய தரப்பினர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மனிதப் புதைகுழிகளுடன் இலங்கை இராணுவத்தை தொடர்புப்படுத்தவே தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள்.

தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள்

தமிழர்களை கொல்ல வேண்டிய தேவை இராணுவத்திற்கு இல்லை. இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

இலங்கையில் யுத்தக் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று சர்வதேச நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

பிரபாகரனிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள். முல்லைத்தீவு பகுதியில் 600 பொலிஸாரை விடுதலை புலிகள் அமைப்பினர் படுகொலை செய்தனர். இது யுத்தக் குற்றம் இல்லையா?

யார் மனிதப் படுகொலை செய்தது. விடுதலைப் புலிகளே மனித படுகொலை செய்தார்களே தவிர இராணுவத்தினர் அல்ல. தமிழர்களை பாதுகாத்து நாங்கள் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...

images
செய்திகள்இலங்கை

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச எழுத்தறிவு

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாவட்டங்களுக்கிடையேயான...

25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...