இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் - 4 மாத குழந்தை மரணம்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் – 4 மாத குழந்தை மரணம்

Share

இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் – 4 மாத குழந்தை மரணம்

குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

04 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது.

நேற்று முன்தினம் குறித்த குழந்தைக்கு படுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 04 மாத தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைக்கு பொதுவான காய்ச்சலுக்கான அறிகுறிகளும் தென்பட்டது, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்று காலை வரை உடல்நிலை மோசமடைந்தது.

உடனடியாக குழந்தையை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்த போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

படுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இருந்து குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இன்றைய தினம் பிரேத பரிசோதனையின் பின்னரே தடுப்பூசி மரணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...