பெண்களை பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்த ஆண் பொலிஸார்! கஜேந்திரன் சீற்றம்!!!
இலங்கைசெய்திகள்

பெண்களை பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்த ஆண் பொலிஸார்! கஜேந்திரன் சீற்றம்!!!

Share

பெண்களை பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்த ஆண் பொலிஸார்! கஜேந்திரன் சீற்றம்!!!

பெண்களை ஆண் பொலிஸார் பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்து மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலை பகுதியில் நேற்று (14.07.2023) பிரதோச தினத்தில் பொங்கல் நிகழ்வை முன்னெடுக்கவுள்ளதாக ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் கல்கமுவ சந்தபோதி தேரர் இங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறித்த பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்துமாறும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலும் கடந்த 11.07.2023 அன்று முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

இவற்றுக்கமைய முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் தடை உத்தரவினை கோரியிருந்த போதும் நீதிமன்றானது, அவ்வாறு வழிபாட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் விக்கிரகங்களை அங்கு பிரதிஸ்டை செய்யாமல் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தது.

இவ்வாறான சூழலில் குறித்த தேரர் தென்பகுதியில் இருந்து சிங்கள மக்களையும் தேரர்களையும் அழைத்து வந்து குருந்தூர்மலை விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். இதன்போது அப்பகுதியில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு பொங்கல் நிகழ்விற்கும் இடையூறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
man death body
இலங்கை

பூட்டிய வீட்டிற்குள் ஆண் ஒருவரின் சடலம் – யாழில் சம்பவம்.

  யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக...

police shooting
இலங்கை

காவல்துறையினர்மீது தாக்குதல் முயற்சி – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி,

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால்...

TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...