236186059 580502976691587 1383056697636242939 n
செய்திகள்இலங்கை

தடுப்பூசிகளை தகர்க்கும் வீரியமிக்கது டெல்டா!! – வெளியானது அதிர்ச்சித் தகவல்

Share

தடுப்பூசிகளை தகர்க்கும் வீரியமிக்கது டெல்டா!! – வெளியானது அதிர்ச்சித் தகவல்

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வீரியமிக்க டெல்டா வைரஸ் திரிபு தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என “நேச்சர்” ஆங்கில சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக முழுமையான தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுக்கொண்டோருக்கும் இந்த வீரியம்கூடிய டெல்டா தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என உலக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என குறித்த சஞ்சிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த அறிக்கையை மேற்கோள்காட்டி கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கையில்,

நோய் எதிர்ப்பு சக்தியை கடந்துசெல்லும் வீரியம் டெல்டா கொரோனா திரிபுக்கு உண்டு. எனவே தடுப்பூசி ஏற்றிய பின்னரும் தொற்று ஏற்படுவதைத் தடுக்க மக்கள் சுகாதார வழிகாட்டலைப் பின்பற்ற வேண்டும்.

நாட்டில் தற்போது தொற்று உறுதியாவோரில் 95.8 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள். தற்போது கிடைக்கப்பெறும் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய நிலையிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

நாட்டின் சில மாகாணங்களில் உறுதிப்படுத்தப்படுவோரில் 84 முதல் 100 வீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களே. எனவே மக்கள் மிக அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் – என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...