mes 720x375 1
உலகம்செய்திகள்

கொவிட் மருத்துவமனையில் தீ! – 14 பேர் உயிரிழப்பு!

Share

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் டெட்டோவோ நகரில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .

இங்கு ஏற்பட்ட தீ, தீயணைப்பு வீரர்களின் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது,.

கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஓட்சிசன் சிலிண்டர்கள் வெடித்தால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மருத்துவமனையின் பணியாளர்கள் எவரும் உள்ளடங்கவில்லை.

இத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கருகிய நிலையில் காணப்படுகின்றமையால், சடலங்களை அடையாளம் காண தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...