பயங்கரவாதமாக மாறியுள்ள சுகாதாரத்துறை
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதமாக மாறியுள்ள சுகாதாரத்துறை

Share

பயங்கரவாதமாக மாறியுள்ள சுகாதாரத்துறை

முப்பது வருடகால பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்த நாட்டில் தற்போது சுகாதாரத்துறை பயங்கரவாதமாக மாறியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்தின் 8ஆவது குழு அறையில் நாடாளுமன்ற குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சியும் அனர்த்தமும் ஏற்பட்டுள்ளது.

நிதி விரயம், மோசடி, திருட்டு, முறைகேடு, தரம் குறைந்த மருந்து, மருத்துவ உபகரணங்கள், தகவல்களை மறைத்தல், அரச அடக்குமுறை, அரச பயங்கரவாதம் போன்ற அனைத்து யுக்திகளையும் பயன்படுத்தி இலவச சுகாதாரக் கொள்கையை அழிக்கும் திட்டத்தில் அரசு ஈடுபட்டுள்ளது.

இவை மட்டுமன்றி நாட்டின் வங்குரோத்து நிலையும் 220 இலட்சம் பொதுமக்களின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...