நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
இலங்கைசெய்திகள்

நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

Share

நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

நாட்டில் ஒவ்வொரு நபருக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் DIGIECON 2030 வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நிலையான நாட்டிற்கு ஒரே பாதை” என்ற தொனிப்பொருளில் இன்று ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வேலைத்திட்டம் நாட்டில் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் சர்வதேச தொழில்நுட்ப தரங்களை பயன்படுத்துதல் உள்ளிட்ட பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தை அறிமுகப்படுத்துதல், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் கலைப் பட்டதாரிகளுக்கு ஆறு மாத தகவல் தொழில்நுட்பப் பாடநெறி அறிமுகப்படுத்துதல், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் புதிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குதல் என பல திட்டங்கள் காணப்படுவதாக கனக ஹேரத் குறிப்பிட்டார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 189
செய்திகள்உலகம்

டிரம்பின் ஈரானியப் போரை நிறுத்தும் முயற்சி தோல்வி: செனட் சபையில் ஜனநாயகக் கட்சியின் தீர்மானம் நிராகரிப்பு!

அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப்...

world 188
செய்திகள்உலகம்

துருக்கியில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி – நாடு முழுவதும் அதிர்ச்சி!

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (ஏப்ரல் 16) இடம்பெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சூட்டுச்...

world 187
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு திரும்புவோருக்கு விசேட வசதி: இனி இணையவழியில் பேருந்து ஆசன முன்பதிவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து, காலி மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களிலிருந்து மீண்டும்...

world 191
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல மாகாணங்களில் இன்று இடியுடன் கூடிய மழை: பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...