சேவலை சிறையில் அடைத்த பொலிஸார்!
இந்தியாஉலகம்செய்திகள்

சேவலை சிறையில் அடைத்த பொலிஸார்!

Share

சேவலை சிறையில் அடைத்த பொலிஸார்!

இந்தியாவில் தெலுங்கானாவில் சேவல் ஒன்றை பொலிசார் சிறையில் அடைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மகபூபநகர் மாவட்டத்தில் பூரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் சிறுவன் ஒருவன் கையில் சேவல் ஒன்றை பிடித்துக் கொண்டு வீதியில் நடந்து சென்றுள்ளான்.

இதை கண்ட அப்பகுதி கிராம மக்கள் சிறுவன் சேவலை திருடிக் கொண்டு செல்வதாக நினைத்து பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சிறுவன் அவன் கையில் வைத்திருந்த சேவலையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுவன் 18 வயது நிரம்பாததால் அவனது பெற்றோரை வரவழைத்த பொலிஸார் சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதே சமயம் சேவலை காணவில்லை என்று யாரும் புகார் அளிக்காததால் பொலிஸார் சேவலை சிறையில் அடைத்து உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சேவல் சிறையில் அடைக்கப்பட்ட செய்தியறிந்த மக்கள் காவல் நிலையம் சென்று சிறையில் இருக்கும் சேவலை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனராம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...