118379347 f959b3bf db0b 4dc9 822e 64a7ea6170e0
செய்திகள்இலங்கை

சிறுவர்களுக்கு பைஸர்- இம் மாதம் ஆரம்பம்1

Share

நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் அறிக்கை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு மேற்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறுவர்களுக்கு இம் மாதமே பைஸர் தடுப்பூசி வழங்கப்படுதல் இத் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கை என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில், க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள 6 லட்சத்து 46 ஆயிரம் மாணவர்களுக்கும், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 4 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி செலுத்துவது இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும்.

அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட ஏனைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...