CVVigneswaran
செய்திகள்இலங்கை

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி!! – ஐ.நாவுக்கு பறந்தது கடிதம்

Share

நாடு இராணுவ ஆட்சியை நோக்கி!! – ஐ.நாவுக்கு பறந்தது கடிதம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால ஒழுங்கு விதிகள் சட்டம் இராணுவ ஆட்சி நோக்கி நாட்டை கொண்டுசெல்ல வாய்ப்புக்கள் உண்டு.

இவ்வாறு தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில்.

நாட்டில், அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால ஒழுங்கு விதிகள், நாட்டை இராணுவ ஆட்சிக்கு கொண்டுசெல்ல வழியமைக்கக் கூடியவை.

காணாமல் போனோர் அலுவலகத்துக்கான நியமனங்கள் இராணுவத்துடன் தொடர்புடையோராலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக தாங்கள் அங்கு செல்வதற்கும், சாட்சியம் அளிப்பதற்கும் அஞ்சுகிறோம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது உறவுகளைரத் தேடியும் நீதி கோரியும் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்கள், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, குற்றவியல் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஏனைய உளவுப் பிரிவுகளால் மிரட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன,

அண்மையில், வடக்கு மாகாணத்துக்கு சிங்களம் பேசும் பிரதம செயலாளர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

படுகொலைகள் மற்றும் நினைவேந்தலை நடத்துவதற்கு பொலிஸாரால் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது – என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...