பேருந்து ஆற்றில் விழுந்தமைக்கான காரணம் வெளியானது
இலங்கைசெய்திகள்

பேருந்து ஆற்றில் விழுந்தமைக்கான காரணம் வெளியானது

Share

பேருந்து ஆற்றில் விழுந்தமைக்கான காரணம் வெளியானது

மன்னப்பிட்டியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானமை குறித்து நாடு பூராகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சாரதியின் கவனயீனம், பணத்திற்காக அனுமதிக்கும் பொலிஸார், பேருந்தினை பரிசோதிக்காத அதிகாரிகள் என பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கதுருவலையில் இருந்து பத்து நிமிடங்கள் பயணித்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பேருந்து மிகவும் வேகமாக சென்றமையினால் பேருந்திலுள்ள பிரதான பாகம் ஒன்று உடைந்தமையினாலேயே பேருந்து ஆற்றில் வீழ்ந்ததாக முதற்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

பேருந்து அதிவேகமாக பயணித்த போது வீதியில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த நிலையில் பேருந்து பாலத்திற்கு அருகில் பேருந்தின் பாகம் உடைந்தமையினால் பேருந்து மேல்நோக்கி பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாகம் உடைந்த பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் இருந்து ஓடையில் விழுந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதுடன் மோட்டார் பரிசோதகரும் விசாரணைகளை மேற்கொள்வார் என பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

பேருந்தை அஜாக்கிரதையாக அதிவேகமாக செலுத்தியதாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி சந்திவெளியைச் சேர்ந்த நடராஜா வினோத் ராஜ் என்பவரை நேற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் பாத்திமா வின்னா உத்தரவிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 180
செய்திகள்உலகம்

உலக நிதிச் சந்தைகளுக்கு எச்சரிக்கை: மத்திய கிழக்கு போரினால் அதிகரிக்கும் அபாயங்கள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், உலகளாவிய நிதி நிலைத்தன்மைக்கு (Global Financial Stability) முன்னெப்போதும்...

world 179
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லவாயவில் பயங்கரம்: காதலனால் இளம் பெண் வெட்டிக்கொலை!

வெல்லவாய, நெட்டோலகம பகுதியில் 32 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான...

world 178
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பாதுகாக்கப்பட்ட 238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்: விசேட விமானம் மூலம் ஈரானுக்குப் பயணம்!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களில் இருந்து மீட்கப்பட்டு, இலங்கையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம்...

world 177
செய்திகள்உலகம்

போப்பின் விமர்சனங்களுக்கு ஜே.டி. வேன்ஸ் பதிலடி: இறையியல் விவகாரங்களில் போப் கவனமாக இருக்க வேண்டும்

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் போர் நடவடிக்கைகள் குறித்து போப் லியோ XIV (Pope Leo...