tamilni 157 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் இருந்து வைப்புச் செய்யப்பட்ட பெருமளவு பணம்!

Share

வெளிநாடுகளில் இருந்து வைப்புச் செய்யப்பட்ட பெருமளவு பணம்!

போராட்டங்களில் பங்கெடுத்திருந்த பலருக்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவான பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தெரியவந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அவற்றில் அதிகப்படியான பணம் உலகில் போதைப்பொருள் கடத்தலில் முக்கியமாக ஈடுபட்டுள்ள கௌதமாலாவிலிருந்தே அனுப்பப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (09.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கான பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனாலேயே கௌதமாலாவிலிருந்து பணம் அனுப்பப்பட்டிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...