rtjy 59 scaled
இலங்கைசெய்திகள்

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக 40 வழக்குகள்

Share

அரசின் செயற்பாடுகளுக்கு எதிராக 40 வழக்குகள்

அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையும் போராடி வருகின்றது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி இதுவரை 40 இற்கு மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானது முதல் இன்றுவரை மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அவர் பதவியை விட்டோடி அடுத்தவர் அவரது இடத்துக்கு வந்த போதிலும் பெரிய மாற்றம் ஒன்றும் இடம்பெற்று விடவில்லை. புதிதாக வறுமையால் 40 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மிகவும் பாரதூரமான நிலைமை. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் அதை இரண்டு வேளையாக மாற்றியுள்ளனர். இரண்டு வேளை உண்டவர்கள் ஒரு வேளையாக மாற்றியுள்ளனர்.

இந்த நிலைமை மோசமடையுமே தவிர பிரச்சினை தீர்வதற்கு வழியில்லை. அரசு உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட்டுவிட்டு தேவையற்ற வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றது.

அரசின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் போராடி வருகின்றோம்.

இதுவரை 40 இற்கு மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கின்றோம். நாம் தொடர்ந்தும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...