முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்
இலங்கைசெய்திகள்

முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்

Share

முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) புதிய தலைவராக துமிந்த ஹுலன்கமுவ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 184 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே துமிந்த ஹுலன்கமுவ புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

அதேவேளை இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உபதலைவர் மற்றும் பிரதி உபதலைவராக முறையே ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா மற்றும் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமல் தெவரதந்த்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க மேற்படி வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிஸுகோஷி, அவரது உரையின்போது சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாகப் பல்வேறு மறுசீரமைப்பு செயற்திட்டங்களைப் பூர்த்திசெய்யவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

‘முக்கிய மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நிதியியல் உறுதிப்பாடு எட்டப்படுவதுடன், அதன்மூலம் முதலீடுகளில் முன்னேற்றம் மற்றும் வணிகங்களுக்கு ஏற்றவாறான சாதகமான சூழல் ஆகியவற்றை அடைந்துகொள்ளமுடியும். வெளிப்படைத்தன்மையையும் செயற்திறனையும் இடைவிடாத்தன்மையையும் மேம்படுத்தக்கூடிய அத்தகைய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு ஜப்பான் வலுவான ஒத்துழைப்பை வழங்கும்’ என்றும் ஹிடேகி மிஸுகோஷி உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும் கடன் வழங்குனர் நாடாக மாத்திரமன்றி, இலங்கையின் நீண்டகால நட்புநாடு என்ற ரீதியில் இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் ஜப்பான் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...