rtjy 9 scaled
இந்தியாஉலகம்செய்திகள்

வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்ற பசு

Share

இந்தியாவிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்றுள்ளது ஓங்கோல் பசு.

திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தீப ஆராதனையின் போது நாட்டு பசுக்களில் இருந்து பெறப்பட்ட பால், தயிர், வெண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படும்.

இதற்கு 500 பசுக்கள் தேவைப்படும் நிலையில், 200 உயர் ரகத்தை சேர்ந்த நாட்டு பசுக்கள் உள்ளன.

மேலும் 300 பசுக்களை வழங்க பக்தர்களும் முன்வந்துள்ளனர், இந்நிலையில் பாலின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வாடகைத்தாய் மூலம் கலப்பினங்களாக உற்பத்தில் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதன்படி ஸ்ரீவெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைகழகத்துடன் தேவஸ்தானம் ஒப்பந்தம் மேற்கொண்டது.

தொடர்ந்து வடமாநிலங்களில் உள்ள உயர் ரக பசுக்களின் கருமுட்டைகளை பல்கலைகழகம் சேகரிக்கத் தொடங்கியது.

அங்கு உயர் ரக காளைகளின் விந்தணுக்களுடன் இணைத்து கருத்தரிக்க செய்யப்பட்டன.

இந்த கரு ஓங்கோல் பசுவின் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது, முறையாக கண்காணிக்கப்பட்ட ஓங்கோல் பசு, தற்போது கன்று ஈன்றுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் மூலம் கன்று ஈன்றுள்ளது ஓங்கோல் பசு.

இதற்கு பத்மாவதி என பெயரிட்டுள்ளனர், அடுத்த 5 ஆண்டுகளில் இதுபோன்று 300க்கும் மேற்பட்ட கன்றுகளை உருவாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை: கல்முனை மற்றும் சாய்ந்தமருதில் 5 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்த...

Untitled 41
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் வழக்கு: பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில்,...

Untitled 40
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடிப் பேச்சு: பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின்...

Untitled 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 4 பேருக்கு மரண தண்டனை!

நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று தனித்தனி கொலை வழக்குகளின் தீர்ப்பை இன்று...