2 2
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

Share

தனது சகோதரன், உறவினர் அல்லது பணியாளர் அதிகாரி என கூறிக்கொண்டு வெளிநாட்டு வேலைக்காக பணம் வசூலிக்கும் எவருக்கும் பணம் வழங்கக்கூடாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

அத்தகைய பண பரிவர்த்தனைக்கு தான் பொறுப்பல்ல என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான எந்தவொரு கொடுக்கல் வாங்கலிலும் தமக்கு தொடர்பில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தும் தொழிலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அல்லது அமைச்சின் ஊழியர்களில் எந்த அதிகாரியும் ஈடுபடவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்புவதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் கும்பல்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் தீவிரமாக தலையிட்டு வருகின்றதுடன், மோசடியாளர்களிடம் அமைச்சரின் ஆதரவு இல்லை எனவும் வலியுறுத்தப்படுகிறது.

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு மாத்திரமே தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைகளுக்கு அனுப்ப முடியும் எனவும், அந்த நிறுவனங்களை மாத்திரம் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...