17
சினிமாபொழுதுபோக்கு

நள்ளிரவில் போலீஸ் நிலையம் சென்ற ரச்சிதா!

Share

நள்ளிரவில் போலீஸ் நிலையம் சென்ற ரச்சிதா!

சரவணன் மீனாட்சி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமான ரச்சிதா, தினேஷும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி நிலையில் ரச்சிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென ரச்சிதா மாங்காடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்று அளித்தார். அதில் “தனது கணவர் தினேஷை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக தனது செல்போனுக்கு தினேஷ் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவதாக” புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் , தினேசை விசாரணைக்கு அழைத்திருந்தனர். இந்த நிலையில் காவல் நிலையம் வந்த தினேஷ் “ரச்சிதாவிற்கு வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம்” என கூறிச் சென்றுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் ரச்சிதாவிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ரச்சிதா நள்ளிரவில் காவல் நிலையத்தில் விசாரணைக்கு, ஆஜராகி விட்டு சென்றிருக்கும் சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

அதுமட்டுமல்லாது பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் தனக்கு மிரட்டல் கொடுப்பதாக ரச்சிதா அளித்த புகார் ஆனது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. தொடர்ந்து இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...