7
இலங்கைசெய்திகள்

ரணிலிற்கு புகழாரம் சூட்டும் சகா!!

Share

ரணிலிற்கு புகழாரம் சூட்டும் சகா!!

அமெரிக்கா,பிரிட்டன் போன்ற நாடுகளின் தலைவர்களை விட ரணில் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்று வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அதன் காரணமாக ரணிலிடம் குரலை உயர்த்தி பேசக்கூடிய தலைவர் உலகில் யாரும் இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பலபிட்டிய மற்றும் ரஜ்கம தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய வஜிர அபேவர்த்தன, ரணில் விக்ரமசிங்கவுக்கு உலக தலைவர்களிடம் பெரும் அங்கீகாரமும் மரியாதையும் இருக்கின்றது.

அதற்கு காரணம் அவரது நீண்ட அரசியல் அனுபவமாகும். நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்ள ரணில் மாத்திரமே முன்வந்தார். ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒவ்வொரு முறையும் அவரது காலை வாரும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதியில் நாட்டு மக்களே அதற்கான விலையை கொடுக்க நேரிட்டுள்ளது.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபைக் கூட்டங்களை நடத்தி கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் பின்னர் கட்சி மாநாட்டை கூட்டி கட்சியின் அரசியலமைப்பை புதிய உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...