6
இலங்கைசெய்திகள்

சஜித்தை கடைகளுக்கு செல்லுமாறு அமைச்சர் கிண்டல்!!

Share

சஜித்தை கடைகளுக்கு செல்லுமாறு அமைச்சர் கிண்டல்!!

அரிசியின் விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள கடைக்குப் போய் வருமாறு சஜித்துக்கு அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். அரிசியின் விலை குறித்த தகவல்கள் தெரியாததால், எதிர்க்கட்சித் தலைவரிடம் கடைக்குச் சென்று அரிசியின் சரியான விலையைக் கண்டறியுமாறு கேட்டுக்கொள்வதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாசுமதி, கீரி சம்பாவை பற்றி யோசித்து விட்டு மற்ற அரிசி பற்றி பேச வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவரிடம் அமரவீர தொடர்ந்தும் கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மகிந்த அமரவீர மேலும் தெரிவித்ததாவது, நீங்கள் ஹம்பாந்தோட்டையில் நீண்ட காலம் இருந்தீர்கள். அரிசி 220க்கு விற்கப்படுகிறது என்று சொன்னீர்கள். நீங்கள் சமீபத்தில் கடைக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். லுனுகம்வெஹர பிரதேசத்தில் அரிசியின் விலை 125 ரூபாவாக பதிவாகியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் பணியாற்றிய அனைவரும் சந்தைக்குச் சென்றனர். சென்று விலைகளைக் கண்டறிந்தார்கள்.

நீங்களும் அவ்வாறு போய் வாருங்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு நீங்கள் கருத்துச் சொல்லாதீர்கள். பாசுமதி, கிரி சம்பாவை பற்றி யோசித்து பேசாதீர்கள். இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நாடு மற்றும் பச்சை அரிசியை உண்கின்றனர். அவற்றின் விலை 200 ரூபாவுக்கு மேல் இல்லை.

எம்ஓபி உரங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. யாராவது கொடுக்கவில்லை என்றால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன். பொலன்னறுவையில் யூரியாவில் சிறிய பிரச்சினை ஏற்பட்டது. நாடு முழுவதும் யூரியா போகிறது.

மண் உரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக எம்ஓபி உரம் உள்ளது. சில அதிகாரிகள் அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக உரத்தட்டுப்பாடுகளை உருவாக்குகின்றனர். அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கன்னியா வெந்நீரூற்று
இலங்கை

கன்னியா வெந்நீரூற்று விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கை.

ஆட்சிக்கு வரும்போது, நாட்டில் வாழும் அனைவரும் சமம் என கூறி ஆட்சியை பிடித்த அரசாங்கம் தற்போது...

சுரேஸ் பிரேமச்சந்திரன்
இலங்கை

குற்ற செயல்களில் தற்கால அரசுக்கும் பங்குண்டு – சுரேஸ் பிரேமச்சந்திரன்

மட்டக்களப்பு – வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற...

சுகீஸ்வர பண்டார
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளருக்கு விளக்கமறியல்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் விளக்கமறியல் உத்தரவு ஜூலை 30...

காணாமல் ஆக்கப்பட்டோர்nnnn
இலங்கை

அவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை – தூதுக்குழுவினரின் வருகையினை தொடர்ந்து வந்துள்ள கருத்து.

இன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனிதக் புதைகுழியை பார்வையிட்ட பின்னர்...