இலங்கைசெய்திகள்

இலங்கையில் மின்சார பாவனையை நிறுத்திக் கொள்வோர் அதிகரிப்பு!

82ZigS0BPiSE4ayfkwdm
Share

இலங்கையில், நான்கு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் குடும்பங்கள் மின்பாவனையை நிறுத்திக் கொண்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் மொத்தமாக சுமார் 60 இலட்சம் குடும்பங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பு இவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

அதன் காரணமாக, கடந்த பெப்ரவரி தொடக்கம் இதுவரை சுமார் நான்கு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் குடும்பங்கள் குறைந்த பட்சம் ஒரு அலகு கூட பயன்படுத்தாமல் மின்சார பாவனையை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

அத்துடன் கடந்த காலங்களில் 90 அலகுகள் வரையான மின்சாரப் பாவனை கொண்டிருந்தோர்.

தற்போது 60 அலகுகளுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அநீதியான முறையில் கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#srilanakNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...