82ZigS0BPiSE4ayfkwdm
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மின்சார பாவனையை நிறுத்திக் கொள்வோர் அதிகரிப்பு!

Share

இலங்கையில், நான்கு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் குடும்பங்கள் மின்பாவனையை நிறுத்திக் கொண்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் மொத்தமாக சுமார் 60 இலட்சம் குடும்பங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பு இவர்களை கடுமையாக பாதித்துள்ளது.

அதன் காரணமாக, கடந்த பெப்ரவரி தொடக்கம் இதுவரை சுமார் நான்கு இலட்சத்து முப்பத்து ஆறாயிரம் குடும்பங்கள் குறைந்த பட்சம் ஒரு அலகு கூட பயன்படுத்தாமல் மின்சார பாவனையை நிறுத்திக் கொண்டுள்ளனர்.

அத்துடன் கடந்த காலங்களில் 90 அலகுகள் வரையான மின்சாரப் பாவனை கொண்டிருந்தோர்.

தற்போது 60 அலகுகளுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அநீதியான முறையில் கடந்த காலங்களில் இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#srilanakNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...