download 2 1 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கறுவா செய்கையை ஊக்குவிக்கும் செயலமா்வு!

Share

வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு ஒன்று எதிா்வரும் மே 20 ஆம் திகதி சனிக்கிழமை வட்டுக்கேட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையில் நடைபெறும் இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வடக்கில் கறுவாச் செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தொடா்பாக விளக்க உரை நிகழ்த்துவாா்.

அதனைவிட கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் பலரும் இந்த செயலமா்வில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிப்பதுடன், பொதுமக்களின் கேள்விள், சந்தேகங்களுக்கு பதிலளிப்பாா்கள்.

வடபகுதியில் கறுவாச் செய்கையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதற்கான செய்முறை விளக்கங்களும் இங்கு வழங்கப்படுவதுடன், ஆா்வமுள்ளவா்களுக்கு கறுவா கன்றுகளும் இலவசமாக வழங்கப்படும்.

ஆா்வமுள்ளவா்கள் யாரும் இந்த செயலமா்வில் பங்குகொண்டு பயனடைய முடியும் என இதனை ஏற்பாடு செய்திருக்கும் புவனகுமாா் தெரிவித்தாா்.

இது தொடா்பில் மேலதிக தகவல்கள் தேவைப்படுபவா்கள் நிகழ்ச்சி இணைப்பாளரான ஐங்கரனுடன் 077 062 9013 தொடா்புகொள்ளமுடியும் என ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

#srilanakNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...

592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...