20230507 113432 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஒரு சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த தேசியத்தின் இருப்பையே சிதைத்து விடும்!

Share

ஒரு சிலர் விடுகின்ற தவறுகள் ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தின் இருப்பையே சிதைத்து விடும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

கந்தரோடையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சில வருடங்களுக்கு முன் திருவடிநிலை பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றபோது படையினர் அந்த காணி தங்களுக்கு விற்கப்பட்டது என்று கூறி காணியுறுதிப் பத்திரத்தை எம்மிடம் காட்டினர். ஆகவே பொதுமக்கள் இவ்விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பாக ஒரு சிலர் இராணுவ முகாம்களின் விஸ்தரிப்புகளுக்காகவும் பௌத்த விகாரைகள் அமைப்பதற்காகவும் தங்கள் காணிகளை விற்பனை செய்யும் போது அது தமிழினத்தின் இருப்பையே சிதைத்து விடும்.

இவ்வாறு காணிகளை விற்பதை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பும் எமக்கு இருப்பதுடன் இவ்வாறு இராணுவ முகாம்களுக்கோ விகாரைகளுக்கோ காணி விற்பனை செய்யும் மனநிலையே பொதுமக்களுக்கு ஏற்படாதவகையில் நாம் செயற்படவேண்டும். – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...