1682751304 protest 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் – கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

Share

அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கிளிநொச்சியில் இன்று (29) ஊடகவியலாளர்கள் சிவில் அமைப்புக்கள் இணைந்து போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் சிவில் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடனும் இன்று காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மத்திய பேரூந்து வளாகத்தில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அது ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும், அவர்கள் தங்களது கடமைகளை சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும், ஊடகவியலாளர்கள் பழிவாங்கப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் எனவே குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றப்படுவதற்கு தங்களது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தவே இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தின் போது ஊடகங்களை அடக்கவே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், பாராளுமன்ற உறுப்பினர்களே ஜனநாயத்திற்கு எதிராக சட்டத்தை ஆதரிக்காதீர்கள், ஜனநாயகத்தை பாதுகாக்கவே சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் ஒடுக்குவதற்கு அல்ல,புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கு சாவுமணி, மக்களாட்சியின் மாண்புக்கு மதிப்பளி ஜனநாயகத்தை பலப்படுத்து போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இப் போராட்டத்தில் வடக்கில் உள்ள ஊடக அமைப்புக்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சிவில் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தென்னிலங்கை ஊடக தொழிற்ச் சங்கம் என்பன கலந்துகொண்டிருந்தன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1685686384 NBRO warns of landslide risks in several areas L
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கையை தேசிய...

suryakumar salman agha 1200 1760670009
செய்திகள்உலகம்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

வான்வழித் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி: முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல் பாகிஸ்தான்...

23 652cc44949045
செய்திகள்இலங்கை

இஷாரா செவ்வந்தியை காதலிக்கவில்லை: நாமல் ராஜபக்ச திட்டவட்டம்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியைத் தான் காதலிக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன...

25 68f24a1996c31
இலங்கைசெய்திகள்

வடக்கு மாகாண இடமாற்றச் சபை விவகாரம்: ஆளுநர் அறிக்கை தொடர்பில் ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடக அறிக்கை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஒரு தெளிவுபடுத்தல் அறிக்கையை...