upul 56456
விளையாட்டுசெய்திகள்

எவரெஸ்ட் பிரீமியர் லீக்கில் இலங்கை வீரர்

Share

நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் 20–20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் உபுல் தரங்க பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்கவுள்ளன, இந்தத் தொடரில் பைரவா கிளேடியேட்டர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி உபுல் தரங்க பங்கேற்கவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக 26 சர்வதேச 20– 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 407 ஓட்டங்களை குவித்துள்ள தரங்க, உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு கழக மட்ட இருபதுக்கு 20 போட்டிகள் 126 இல் விளையாடியுள்ளார்.

அவற்றில் இரண்டு சதங்கள், 19 அரைச்சதங்கள் அடங்கலாக 3384 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...