Sri
இலங்கைசெய்திகள்

பெயர் மாற்றமே அழிவுக்கு காரணம்!!

Share

பெயர் மாற்றமே அழிவுக்கு காரணம்!!

சிலோன் என்ற பெயரிலிருந்து ஸ்ரீ லங்கா என இந்நாட்டின் பெயரை மாற்றியது தான் இவ்வளவு காலமாக நாடு அழிவுக்கு உள்ளாவதற்கான காரணம் என விஞ்ஞான எழுத்தாளர் மற்றும் வான சாஸ்திரியான அநுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

“எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாராநாயக்க மற்றும் விஜய குமாரதுங்கவின் படுகொலையிலிருந்து நஷ்டமடைந்த பல நிறுவனங்கள் வரை ஸ்ரீ என்ற சொல் பாரிய அழிவைக் கொண்டுள்ளது. இலங்கையின் இறுதி அரசனின் பெயர் கூட ஸ்ரீ விக்ரமராஜசிங்க தான்“ என அவர் மேலும் விளக்கமளித்தார்.

அரசியல் தலைவர்களின் பெயர், அரசியல் கட்சிகளின் பெயர், அரச நிறுவனங்களின் பெயர் மற்றும் நாட்டின் பெயருக்கு முன் ஸ்ரீ என்ற சொல்லை பாவிப்பது தான் நாட்டை இந்த வங்குரோத்து நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கத்திலிருந்து எமது நாட்டிற்கு துரதிஷ்டம் வந்தது.

அக்கட்சியை நிறுவிய பண்டாரநாயக்க, வாகன எண் பலகைகளில் ஸ்ரீ எனும் எழுத்தை  சேர்த்தார். பின் நாட்டில் சிங்கள-தமிழ் இனக் கலவரம் தோன்றி பெரும் உயிர் உடைமைடகள் சேதம் ஏற்பட்டது. பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனர் படுகொலை செய்யப்பட்டார்“ என அவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...