FB IMG 1681704167366
இலங்கைஉலகம்செய்திகள்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

Share

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான சிலைகள் கண்டுபிடிப்பு!

தமிழகத்தின் சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலைகள் மற்றும் தமிழ் எழுத்தில் தேவாரம் எழுதப்பட்ட செப்பு தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை தருமை ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் கோவில்.இங்கு தோண்ட தோண்ட பல ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மயிலாடுதுறை சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் 35 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வாசல் கோபுரம் அருகே யாக சாலைக்காக மண் எடுக்கும் பணிகள் நடைபெற்றது.

அப்போது அங்கே 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடம்,100 க்கும் மேற்பட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட சிலைகள் அனைத்தும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிலைகளின் மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்படும் நிலையில், சம்பவ இடத்திற்கு தொல்லியல் துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

கோவிலில் பல சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.தமிழகத்தின் சீர்காழியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிலைகள் மற்றும் தமிழ் எழுத்தில் தேவாரம் எழுதப்பட்ட செப்பு தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....