202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருளுடன் பெண் கைது!!

Share

யாழ்ப்பாணம் 5 சந்திப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் பிரபல வியாபாரி ஜுவிதா யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. 5 கிராம் 470 மில்லிகிராம் ஹெரோயின் உடமையில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர் யாழ்ப்பாணத்தின் பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி என போலீசார் கூறினர்.

குறித்த பெண் பலகாலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தெரிய வந்துள்ளது.

இவருடைய கணவரும் ஏற்கனவே போதைப்பொருள் வியாபாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்திருக்கின்றார்.

அத்துடன் 10 முள் வாங்குபவர்களுக்கு ஒரு முள் இலவசம், தனது பெயரை பச்சை குத்தும் இளைஞர்களுக்கு விசேட கழிவுகளையும் இவர் வழங்கி தனது வியாபாரத்தினை செய்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கபடுகின்றது ,

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...