நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்ட பொழுது மயக்கமடைந்த இளைஞன் அதிகாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மாசுவன் சந்தி நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் குருசாந்தன் வயது (35) என பொலிஸார் கூறினர்.
குறித்த இளைஞன் நேற்று நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் மயக்கம் அடைந்த நிலையில் நண்பர்கள் வீடு கொண்டு வந்து சேர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை உறவினர்கள் பார்த்த பொழுது குறித்த இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்தல இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment