1860810 boat
இந்தியாஇலங்கைசெய்திகள்

மர்மமான முறையில் வந்த இலங்கை படகால் பரபரப்பு!

Share

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை சுற்றுலா தலத்துக்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் வெளிநாட்டு படகு ஒன்று மர்மமான முறையில் நிற்பதாக மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த படகை பார்வையிட்டனர். அப்போது அது இலங்கை பதிவெண் கொண்ட பைபர் படகு என்பதும், அதிவேக என்ஜின் கொண்டதும் என உறுதி செய்யப்பட்டது.

அந்த படகின் உள்ளே 2 டீசல் கேன், தண்ணீர் பாட்டில், இலங்கை தின்பண்டங்கள் ஆகியவை இருந்தன. இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் மர்ம ஆசாமிகள் மணமேல்குடி கோடியக்கரை வழியாக தமிழ்நாட்டிற்குள் இரவில் ஊடுருவி உள்ளனர்.

அவர்கள் எத்தனை பேர் என்பது தெரியவில்லை. இவர்கள் கடத்தல் தொழிலுக்காக வந்தனரா? அல்லது இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் குடும்பமாக வந்துள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைபர் படகில் 2 டீசல் கேன் இருந்ததால் மணமேல்குடி கோடியக்கரை வழியாக கிழக்கு கடற்கரை செல்லும் சாலையில் இணைந்து சென்னை அல்லது கன்னியாகுமரி செல்ல முடியும்.

இதனை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் கோடியக்கரை பகுதியை தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கோடியக்கரை வழியாக செல்லும் சாலை முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் மீனவ கிராமங்களுக்கு சென்ற போலீசார் மர்ம ஆசாமிகள் வந்தனரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் இலங்கை பைபர் படகு மர்மமான முறையில் நின்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...