Bandula Gunawardane
இலங்கைசெய்திகள்

வரி தொடர்பில் பந்துல கருத்து!!

Share

மாதாந்தம் ரூ. 200,000 சம்பளம் பெறும் ஊழியர் ஒருவர் சம்பாதிக்கும் போது  அறவிடப்படும் வரியாக இனி ரூ.7,500 செலுத்த வேண்டும். தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகுறைப்பிலிருந்து ரூ.5,800 மீதப்படும். எனவே அவர் அல்லது அவள் 1,700 ரூபாய் மாத்திரமே செலுத்த வேண்டியிருக்கும் என  ஊடகவியலாளர் சந்திப்பின் போது  வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

2001 தொடக்கம் 2007 வரையிலான இலங்கையின் வர்த்தக இடைவெளியானது 25.5 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதுடன், அரசாங்கத்தின் டொலர் மற்றும் ரூபாயை மேம்படுத்துவதன் மூலம் 2028 ஆம் ஆண்டளவில் இதை நிர்வகிக்க கூடியவாறு குறைக்க IMF விரும்புகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பாதிக்கும்  போது அறவிடப்படும் வரி உயர்வு மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விலக்களித்தலின் மூலம் அரச வருவாயை தற்போதுள்ள 8% இலிருந்து 20 வீதமாக உயர்த்துவதே நோக்கமாகும். அந்தப் பொருளாதார மேம்பாட்டின் நன்மைகள் பொது ஊழியர்களை சென்றடையும்.

வரி உயர்வின் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு விலக்களிப்பதன் மூலம் அரச வருவாயை உயர்த்தும் IMF இன் திட்டத்திற்கு இலங்கை உடன்பட்டுள்ளது. எனவே 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் , விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெற இவ்வாறான சீர்திருத்தங்களை செய்ய அரசாங்கம் முனைகின்றது.

இலங்கை உடன்படிக்கையை மதிக்கத் தவறினால், விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெறும் 2 ஆவது வாய்ப்பு எமக்குக் கிடைக்காது. எவ்வாறாயினும் பொருளாதார மேம்பாட்டின் முதல் நிகழ்வாக அரசாங்கம் தற்போதைய வரி வீத்ததைக் குறைக்கவே முயல்கிறது.

உலக சந்தையில் எரிவாயு மற்றும் எண்ணெய் விலை குறைப்பின் பலனைக் கடத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என ஒரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போது அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது , பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பால் வாழ்க்கைச் செலவு குறைந்து மேலும் பொருட்களின் விலைகளைக் குறைக்கப் பங்களிக்கும் என அவர் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...