202104110956313706 Introduction of Electronic Connection Name Change System SECVPF
இலங்கைசெய்திகள்

மின்கட்டணம் குறைய வாய்ப்பு!

Share

மின்சார கட்டணம் 30% ஆல் குறைக்கப்பட வேண்டும் என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தவிசாளர் ஜானக ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.

மின்சார தேவை குறைந்துள்ளமையைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததுடன் எரிபொருள் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப மின் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும் என நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சநதிப்பில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் முதல் மூன்று மாதங்களில் மின்சார தேவை 18% ஆல் குறைந்துள்ளது.  மின்சாரத் தேவை குறைந்துள்ளதால், மின் உற்பத்தி மற்றும் விநியோக செலவும் குறையும்.  ஆகையால், இலங்கை மின்சார சபையினால் இவ்வருடத்திற்காக மதிப்பிடப்பட்ட மின் தேவை மதிப்பீடு தவறானது என்பது தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணையத்தின் மதிப்பீடு சரியானது. ஏனென்றால் குறித்த தேவைக் குறைவால் நாங்கள் 35% கட்டண உயர்வை பரிந்துரை செய்திருந்தோம். ஆனால் இந்த நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் பெரும்பான்மையான ஆணைய உறுப்பினர்கள், இலங்கை மின்சார சபையால் பரிந்துரைக்கப்பட்ட 60% உயர்வை அங்கீகரித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையால் மதிப்பிடப்பட்ட மின் தேவைக்கு மாறாக குறைந்த தேவையே இருக்கிறது. எனவே மின் விநியோகத்திற்கான செலவு குறைக்கப்பட வேண்டும்”, என ரத்நாயக்க தெரிவித்தார்.

நாப்தா எண்ணெய், எரிபொருள், நிலக்கரி மற்றும் டீசல் எண்ணெய்களின் விலை குறைப்பின் நன்மை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்  என பொதுப் பயன்பாடுகள் ஆணையத் தவிசாளர் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...