mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவை சந்தித்தனர் பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள்

Share

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் விஜேராம இல்லத்தில் சனிக்கிழமை (01) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு, நாட்டில் எரிபொருளை விநியோகிக்கும் உரிமையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு விளைவித்த 4 தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட 20 பேர், கடந்த 29ஆம் திகதி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதுடன், கூட்டுத்தாபன வளாகம் மற்றும் சேமிப்பு முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

குறித்த ஊழியர்களை மீண்டும் கடமையில் இணைத்துக்கொள்வது குறித்தே இந்த பேச்சு இடம்பெற்றுள்ளதாகவும் 20 பேரில் 19 பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தெரியவருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...